பாரினி லேஒரு நேரில்லை யாம்உயர்
பைந்தமிழ் வாழியவே! - நம்
பாரிட்புந் தார்செயிண் மேரித் மிழ்ப்பள்ளி
வாழிய வாழியவே! (பாரினிலே)
அன்பொளி வீசிடும் இன்பம லேசியம்
அழகிய பூஞ்சோலை - அதில்
பண்பொடு மூவினம் பாங்குற வாழ்ந்திடப்
பாடுவோம் பாமாலை! (பாரினிலே)
நீர்வளம் நெல்வளம் நிறைவுடன் பல்வளம்
நிரம்பிடும் கிரயானில் - என்றும்
சீர்பெறும் கல்வியும் செல்வமும்; வாழ்வினில்
சிரித்திடும் இளவேனில்! (பாரினிலே)
ஆசிருள் நீங்கிட அறிவொளி பாய்ச்சிடும்
ஆசான் குழுவாழ்க - அதில்
மாசறு பொன்னென மாண்புயர் வெய்திடும்
மாணவர் குலம்வாழ்க! (பாரினிலே)
ஈன்றவர் சான்றவர் இன்புறக் கல்வியில்
இமயத்தை நாமடைவோம் - உயிர்
போன்றநம் மரபையும் மொழியினம் நாட்டையும்
போற்றியே காத்திடுவோம்! (பாரினிலே)
ஆக்கம்:-
இறையருட் கவிஞர் செ. சீனி நைனா முகம்மது
பினாங்கு
0 comments:
Post a Comment